ஐபிஎல் போட்டி குறித்து நடிகை கஸ்தூரியின் டுவிட்; என்ன சொன்னார் தெரியுமா?
chennai - chepakkam - ipl match today - kasthuri twit
2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கோப்பைக்கான தொடரானது 11வது சீசன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு 12 சீசன் ஐபிஎல் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இன்றைய முதல் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் மோதுகின்றன. இந்நிலையில் இப்போட்டியை காண அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி காவிரிப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராடிய நல விரும்பிகள் இப்போது எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்தாண்டு கர்நாடகா அரசு காவிரி தண்ணீர் திறந்துவிடவில்லை என்பதற்காக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் போராட்டம் நடத்தினர். இதனால், சென்னையில், நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனே மைதானத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து இந்தப் போட்டிக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்க சொல்வது போன்று இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362