நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை ஓட ஓட விரட்டிய மும்பை அணியின் ஒரே வீரர் இவர்தான்!
நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் தோல்விக்கு மும்பை அணியின் அதிரடி பந்துவீச்சு தான். அதிலும் ஒரு பந்து வீச்சாளர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 41வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. நேற்றைய போட்டியில் சென்னை அணி மிக மோசமாக விளையாடியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணி முதல் ஓவரிலேய விக்கெட்டை பறிகொடுக்க ஆரம்பித்து அடுத்தடுத்த ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக சாம் கரன் மட்டும் 47 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 114 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்கள் இருவர் மட்டுமே களமிறங்கி சென்னை அணியை மிக எளிதில் வென்றனர். டி காக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து 12.2 ஓவர்களில் 116 ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் மும்பை அணியின் அதிரடி பந்துவீச்சு தான். அதிலும் ட்ரென்ட் போல்ட் மட்டுமே 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதிலும் அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணி சொற்ப ரன்களில் சுருண்டதற்கு காரணமானார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362