ஒரே இரவில் மாறிய வாழ்க்கை! கெடு விதித்த ECB... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்? அதிர்ச்சி வீடியோ..!!
லண்டன் நைட்கிளப்புக்கு வெளியே ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலான நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை தொடங்கியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் லண்டனில் உள்ள நைட்கிளப்புக்கு சென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நைட்கிளப்புக்கு வெளியே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படும் நிலையில், அதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.
நைட்கிளப்புக்கு வெளியே மோதல்
தகவலின்படி, நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை இரவு லண்டனில் உள்ள ஒரு நைட்கிளப்புக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு இருந்த சில ரக்பி வீரர்களுடன் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் நிலைமை மேலும் பதற்றமடைந்து, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒருவர் தரையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் இடம்பெற்ற 62 விநாடி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சந்தோஷத்தில் ஓடி வந்து கொடுத்த முத்தம்! வெற்றி மேடையில் காதலியுடன் படுத்த ஹர்திக் பாண்டியா! சர்ச்சையான வீடியோ காட்சி!!!
வீடியோ வைரலால் அதிகரித்த அழுத்தம்
சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள இந்த வீடியோ, கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டோக்ஸின் நடத்தை குறித்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விவாதித்து வருகின்றனர்.
இதனால் ECB வீரர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது. போட்டிக்குப் பிறகு வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதும் விசாரணையின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
கேப்டன் பதவியைச் சுற்றியுள்ள தகவல்கள்
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள வாரியம், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என கூறப்படுகிறது. விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் கேப்டன் பதவி குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் தனது எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருவதாகவும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: போலீஸ்கு பயந்து புடவை குவியலுக்கு ஒளிந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்! அடுத்த நொடி போலீஸ் செய்த அதிரடி செயல்... பகீர் கைது வீடியோ..!!!