3வது டெஸ்ட் போட்டி.! அணைத்து விக்கெட்டுகளையும் தட்டி தூக்கிய இந்திய அணி.!
105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டி, T20 டெஸ்ட் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நேற்றைய ஆட்டம் மழையால் பாதியில் பாதிப்படைந்தது. இதனால் சிறிது நேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மழை நின்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. இதனையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது. இந்தநிலையில், இன்று 2வது ஆட்டம் தொடங்கியது.
105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டிய ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362