×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தினம் தினம் கண்ணீர் விட்டு அழுவேன்! ஹிந்தியால் தவித்த தவிப்பு! அஸ்வினின் உருக்கமான பேச்சு!

Aswin talk about hindi

Advertisement


தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஹிந்தி மொழி தெரியாததால் தனிமையில் தவித்ததாக தெரிவித்தார். மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, விளையாட செல்லும் ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருப்பேன்.

ஹிந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்த எனக்கு பேச தெரியாது. இதனால் விளையாடும் போது பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் தவித்தேன். வாய்ப்பு யாரையும் தேடி வராது. நாம் தான் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். 

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசைபட வேண்டும். ஒருபோதும் இதுபோதும் என்று இருந்து விடக்கூடாது. இலக்கை தாண்டிய பயணங்களும் நம் வாழ்க்கையில் இருக்கும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முன்னேறி செல்ல வேண்டும் என பேசினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aswin #cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story