×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்திய அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா.! கே.எல்.ராகுலுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.! என்ன காரணம்.?

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சென்று நியூசிலாந்து அணியுடனான உலக ட

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சென்று நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றது. பின்னர் அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

இதற்காக இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட்-க்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருதிமான் சாஹாவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் விக்கெட் கீப்பரின் இடத்திற்கு ரிஷப் பண்ட் தான் முதல் தேர்வாக இருந்தார். அவருக்கு கொரோனா உறுதியானதால் அடுத்தப்படியாக விருதிமான் சாஹா இருந்தார். தற்போது அவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் விருதிமான் சாஹா ஆகிய இருவரும் ஒருவேளை அடுத்த 10 நாட்களுக்குள் குவாரண்டனை விட்டு வெளியே வராமல் இருந்தால் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு எப்படியும் ராகுலின் பெயர் தான் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #cricket player #kl rahul
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story