வீட்டில் யாரும் இல்லாத நேரம்..! மாணவியை அடிக்கடி அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்த இளைஞர்..! மூன்று மாதம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..!
college student made pregnant of school girl
நாகை மாவட்டம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் + 1 மாணவியிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கற்பமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பிரவீன். கல்லூரியில் படித்து வரும் பிரவீன், அதே பகுதியை சேர்ந்த ப்ளஸ்- 1 மாணவியை காதலித்து வந்துள்ளார். அடிக்கடி இருவரும் வெளியில் தனியாக சந்தித்துள்ளனர்.
சில நாட்கள் இருவரும் பழகி வந்த நிலையில், பிரவீன் அந்த மாணவியிடம் நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கேட்டுள்ளார். இதனை நம்பி ஏமாந்த அந்த பெண்ணும் இதற்கு சம்மதிக்க, தனது வீட்டிற்கு யாரும் இல்லாத சமயத்தில் அழைத்து சென்று மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார் பிரவீண்.
இதேபோல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது அவளின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்து பதற்றமடைந்த பெற்றோர் கருவை கலைப்பதற்காக அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்கள் கருவை கலைத்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும் என்று கூறினார்.
இதனால் மாணவியின் கருவை அவர்கள் கலைக்க வில்லை மேலும் கற்பமாக்கிய அந்த இளைஞன் மீது காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீஸ் அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.