×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விலை உயர்ந்த மதுப்பாட்டில்கள் கடத்தல்.. போலீசாரிடம் சிக்கிய வாலிபர்

விலை உயர்ந்த மதுப்பாட்டில்கள் கடத்தல்.. போலீசாரிடம் சிக்கிய வாலிபர்

Advertisement

புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் ஏட்டு பாஸ்கரன், போலீஸ்காரர்கள் ராஜா, செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவையில் இருந்து கோட்டக்குப்பம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதனை பிரித்து பார்த்த போது விலை உயர்ந்த 720 மதுப்பாட்டில்கள் இருந்தன. மேலும் காரில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது புதுவை மாநிலம் லாஸ்பேட்டை லெனின் நகரை சேர்ந்த சடையப்பன் என்பது தெரிய வந்தது.

மேலும் இந்த மதுப்பாட் டில்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார் டிரைவர் சடையப்பனை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுப்பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக வெளி மாவட்டங்களுக்கு வேன் மற்றும் கார்களில் மதுப்பாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pudivai #tamilnadu #vilupuram #alcohol
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story