Election 2024 | "தமிழக மீனவர்கள் தொடர்பாக மோடி மௌனம் காப்பது ஏன்.?"... தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி .!
Election 2024 | தமிழக மீனவர்கள் தொடர்பாக மோடி மௌனம் காப்பது ஏன்.?... தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி .!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. இந்தப் பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை அகற்ற திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறது.
தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இந்தியா கூட்டணி சார்பாக தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362