×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதனை செய்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.! விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி.!

இதனை செய்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.! விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி.!

Advertisement

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி விட்டு ஒரே தலைமையாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தரப்பில் செய்து வருகின்றனர்.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு சட்டரீதியான நடவடிக்கைகளை அவர் கையாண்டு வருகிறார். இருப்பினும் அதனை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வலிமைமிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர். புரட்சித்தலைவி அம்மா கூறியது போல தன்னலம் கருதாது கட்சியின் நலனையும் கவனத்தில் கொண்டால், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Admk #Vijayabaskar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story