×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.! கொந்தளித்த வானதி சீனிவாசன்..!

முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.! கொந்தளித்த வானதி சீனிவாசன்..!

Advertisement

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கே அவர் பேசிய போது இந்திய நாட்டின் பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை 15 ரூபாய் கூட ஒருத்தருக்கும் கொடுக்கவில்லை என்று சாடி இருந்தார்.

அதேபோல் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசிய போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது போலவே மோடி 15 லட்சம் கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றியுள்ளார் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன் பிரதமர் மோடி மக்களுக்கு 15 லட்சம் வழங்குவேன் என்று கூறிய ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடாவிட்டால் அமைச்சர் உதயநிதியும், முதலமைச்சர் ஸ்டாலினும் அவர்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

மேலும் பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியாக 15 லட்சம் வழங்குவதாக தெரிவித்து இருந்தார் என்று ஊழலில் திளைத்த திமுக கட்சி பொய் பரப்புரை செய்து வருகிறது என்றும் அதில் தெரிவித்திருந்தார்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk #bjp #vanathi srinivasan #M K Stalin #Udhyanithi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story