பதவி வேணும்னா முதல்ல இத பண்ணுங்க.... முதல்வர் விஜய்யின் அல்டிமேட் கண்டிஷன்..! ஆடிப்போன அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!!!
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு உடனடி பதவி வழங்கப்படாது என தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. களப்பணியின் அடிப்படையில் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய முன்னாள் நிர்வாகிகளுக்கு இதுவரை கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. களப்பணியின் செயல்திறனை மதிப்பீடு செய்த பிறகே பதவிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என கட்சித் தலைமை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவிக்கு முன் களப்பணி அவசியம்
கட்சிப் பதவிகள் தொடர்பாக தலைமைப் பீடத்தை முன்னாள் நிர்வாகிகள் அணுகியபோது, உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அவர்களிடமிருந்து கிடைக்கும் நேர்மறையான கருத்துகளின் அடிப்படையிலேயே கட்சிப் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பனையூர் தலைமை தெளிவாகக் கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைமையின் நம்பிக்கையைப் பெற தீவிர முயற்சி
இந்த நிபந்தனை முன்னாள் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமையின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில் அவர்கள் தங்களது பகுதிகளில் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதிகளில் வேகமெடுத்த செயல்பாடுகள்
குறிப்பாக, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது தொகுதிகளில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மக்கள் சந்திப்பு மற்றும் அமைப்பு ரீதியான பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் கட்சி அமைப்பு மாற்றங்களில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையின் மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக வில் போர்க்கொடி தூக்கிய 10 முக்கிய பிரமுகர்கள்..! அடுத்து கட்சியிலிருந்து விலகலா? அதிர்ச்சியில் CM விஜய்..!!!