×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வரும் ஜனவரில எண்ட் இல்ல..! திமுக - வுக்கு தான் நாட்கள் எண்ணனும்! மொத்தத்தையும் புட்டு புட்டு வைத்த செங்கோட்டையன்! இனி அரசியலில் அதிரடி தான்...!!!

திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதியின் விமர்சனத்துக்கு தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். இடைத்தேர்தல் வெற்றி, கூட்டணி, மின்வெட்டு குறித்து

Advertisement

தமிழக அரசியலில் தவெக - திமுக இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. வரும் ஜனவரியுடன் தவெக ஆட்சி கவிழும் என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்திருந்தார். இதற்கு நாகப்பட்டினத்தில் பதிலளித்த தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தவெகவின் நாட்கள் எண்ணப்படவில்லை என்றும், திமுகவுக்கான நாட்கள்தான் எண்ணப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

‘திமுகவுக்கான நாட்கள்தான் எண்ணப்படுகின்றன’

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியே தவெகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் புதிய வரலாற்றை உருவாக்கி வருவதாகவும், அவர் இருக்கும் வரை தமிழகத்தின் முதலமைச்சராக தொடர்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக - வை தடுக்க திமுக, அதிமுக போடும் திட்டம்! ஆனால் முதல்வர் விஜய் போடும் டபுள் கால்குலேஷன்... அதிகாரிகளுக்கு பரந்த ஆர்டர்! இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி ...!!!

தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படுவதாக ஆர்.எஸ். பாரதி கூறிய கருத்தை திட்டவட்டமாக மறுத்த செங்கோட்டையன், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தங்கள் பயணத்தை பாதிக்காது என்றும் குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் சின்னம் தொடர்பான அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் தங்களது வெற்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி உறுதி?

அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வெற்றி 100 சதவீதம் தவெகவுக்கே கிடைக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், இடதுசாரிகள் மட்டுமின்றி பல முக்கிய அரசியல் கட்சிகளும் விரைவில் தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக அவர் கூறினார். மிசா விவகாரத்தை முன்வைத்து தவெகவை திமுக விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் திமுக நடந்துகொண்ட விதத்தை சுட்டிக்காட்டியும் செங்கோட்டையன் விமர்சனம் செய்தார்.

மின்வெட்டு, தலைமைச் செயலகம் குறித்து அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு மின் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், விரைவில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது சிறிய அளவில் எதிர்ப்புகள் எழுவது இயல்புதான் என்றும், தற்போதைய கோட்டை வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் தலைமைச் செயலகத்தை மாற்றும் நடவடிக்கை அவசியமானது என்றும் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

 

இதையும் படிங்க: கட்சி தலைமையின் உத்தரவை மீறிய ECR சரவணன்..! தவெகவில் அடுத்த விக்கெட் அவுட்டா ? பரபரப்பு போஸ்டர்....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக #RS Bharathi #கே.ஏ. செங்கோட்டையன் #இடைத்தேர்தல் #TVK Alliance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story