திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சந்திரா பட்டாச்சார்யா திடீர் ராஜினாமா! நிலைகுலைந்த மேற்கு வங்கம்.!!!
மேற்கு வங்க தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரசில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. மாநிலத் தலைவர் சந்திரா பட்டாச்சார்யா ராஜினாமா செய்தது மம்தா பானர்ஜிக்கு புதிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.
மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சந்திரா பட்டாச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அரசியல் ரீதியாக புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
பதவியேற்ற ஒரே மாதத்தில் விலகல்
மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே சந்திரா பட்டாச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கட்சிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியலில் அடுத்த குண்டு.... செல்வப்பெருந்தகை பதவி ராஜினாமா? பாய்ந்து வந்த மாணிக்கம் தாகூர்.. வெடித்த பூகம்பத்தால் பரபரக்கும் தமிழக அரசியல்.!!!
58 எம்.எல்.ஏக்களின் அதிருப்தி பின்னணி
ஏற்கனவே மம்தா பானர்ஜி தலைமைக்கு எதிராக 58 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு, கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்தச் சூழலில் மாநிலத் தலைவரின் ராஜினாமா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதலை மேலும் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
மாநிலத் தலைவரின் விலகலைத் தொடர்ந்து கட்சித் தலைமையகம் அடுத்தகட்ட நிர்வாக மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உருவாகி வரும் அரசியல் குழப்பத்தை சமாளிக்க மம்தா பானர்ஜி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது மேற்கு வங்க அரசியலில் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த அந்தர் பல்டி! திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த ஓ.பி.எஸ்.... தவெக-வில் இணையப்போகிறாரா?. தேனியில் பரவும் ரகசிய தகவல்!!!