×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாஜகவின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் மரணம்.! திரளாக கூடிய கூட்டத்தால் பரபரப்பு.!

பாஜகவின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் மரணம்.! திரளாக கூடிய கூட்டத்தால் பரபரப்பு.!

Advertisement

திருச்சியில் உள்ள கே.கே நகர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் பொன் தண்டபாணி (60). இவர் பாஜக கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இவர் தற்போது திருச்சி நவல்பட்டு பகுதியில் இருக்கும் விமான நிலையத்தின் அருகில் உள்ள மொராய் சிட்டியில், புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்.

அந்த வீட்டின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இவர் தினமும் அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வகையில் மார்ச் 7ஆம் தேதி, மாடியில் இருக்கும் கான்கிரீட் தளத்திற்கு தண்ணீர் தெளித்து கொண்டிருந்தபோது, அவர் கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையின் போது, அவர் முன்பே இறந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து நவல்பட்டு காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் இறந்த இந்த சம்பவம் அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பிரேத பரிசோதனை கிடங்குக்கு அருகே பாஜகவினர் திரளாக கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trichy general secretary #Bjp general secretary #bjp #accident #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story