×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசியல் புள்ளி மனைவி, குழந்தைகள் கண்முன்னே வெட்டிப்படுகொலை.. நடுரோட்டில் துணிகர செயல்.. பதறவைக்கும் துயரம்.!

அரசியல் புள்ளி மனைவி, குழந்தைகள் கண்முன்னே வெட்டிப்படுகொலை.. நடுரோட்டில் துணிகர செயல்.. பதறவைக்கும் துயரம்.!

Advertisement

அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை அவரது மனைவி மற்றும் மகள்களின் கண்முன்னே ஒரு கும்பல் வெட்டிக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் அருகாமையில் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றுபவர் மனோகரன். இவர் குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்ப்பக்கத்தில் வந்த டிப்பர் லாரி ஒன்று காரின் மீது வேகமாக மோதிய நிலையில், கார் நிலைகுலைந்து பின்பக்கமாக பள்ளத்தில் இறங்கியுள்ளது. தொடர்ந்து லாரியில் இருந்து இறங்கிய 10க்கும் மேற்பட்ட கும்பல் மனோகரனை அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் கண்முன்னே சரமாரியாக வெடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், மனோகரன் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எதற்காக அவரை கொலை செய்தனர்? எனவும், கொலை செய்த கும்பல் யார்? எனவும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvallur #death #Murder #Admk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story