சற்று முன்.... பட்டப்பகலில் விசிக நிர்வாகி அன்பழகனை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை! பெரும் பரபரப்பு...!!!
சென்னை தாம்பரம் அருகே திருநீர்மலையில் விசிக நிர்வாகி அன்பழகனை 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் வெட்டிக் கொன்றது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அருகே திருநீர்மலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி அமைப்பாளர் அன்பழகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த அவரை, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. பட்டப்பகலில் நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது வெறிச்செயல்
திருநீர்மலை பகுதியில் அன்பழகன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாக தகவல். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அவரைச் சுற்றிவளைத்துள்ளனர். சற்றும் எதிர்பாராத நிலையில் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிய கும்பல், அன்பழகனை படுகாயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெபமாலையுடன் நிதியமைச்சர்.. திருமாவளவன் சொன்ன வார்த்தை.. திருச்சியில் விறுவிறுப்பு பேட்டி.!
பட்டப்பகலில் நடந்த கொலையால் அதிர்ச்சி
தாக்குதலில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த பட்டப்பகல் கொலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
அன்பழகன் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தப்பியோடிய 6 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த தகவல் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லிஸ்ட் ரெடி.... 6 அமைச்சர்களின் பதவி பறிப்பு? CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி ஆக்க்ஷன்...! கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்!!!