BREAKING : ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் திருமாவளவன்! தவெக அமைச்சரவையில் விசிக...! உற்று நோக்கும் திமுக...அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!!
தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளையும் சேர்க்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் அழைப்புக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. தற்போது 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில், மீதமுள்ள அமைச்சரவை இடங்கள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் இணைக்க வேண்டும் என்ற கருத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விசிக, ஐயூஎம்எல், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது முதலமைச்சர் விஜயின் விருப்பம் என்று கூறினார். அனைவரும் ஒரே குடும்பம் போல இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எதிர்பார்ப்பு
மே 21ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 22 அமைச்சரவை இடங்கள் இன்னும் காலியாக இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சியில் விஜய்! தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கட்சி.....அதிகாரபூர்வ அறிவிப்பால் அரசியல் வட்டாரதில் பரபரப்பு!!!
இதற்கிடையில், அதிமுகவில் சி.வி. சண்முகம் அணியினர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, அவர்கள் அமைச்சர் பதவி கேட்டு ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
திருமாவளவனின் பதில் என்ன?
ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு பிறகு, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் விஜய் ஏற்கனவே நேரில் சந்தித்தபோது இந்த கோரிக்கையை முன்வைத்திருந்ததாக கூறினார்.
மேலும், தற்போது தமிழக வெற்றிக்கழகம் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருப்பதாகவும், ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
திமுக வட்டாரத்தில் கவனம்
முன்னதாக மற்ற கூட்டணி கட்சிகளும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறிய கட்சிகள் தற்போது அமைச்சரவையில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெக அரசில் இடம்பிடிக்கலாம் என்ற தகவல், அரசியல் சூழலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.