×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எம்எல்ஏக்களின் காலியிடம் 21 ஆக உயர்வு; மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா.!

tamilnadu minister balakrishna reddy rajinama

Advertisement

சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு தமிழக கர்நாடக எல்லையில் நடைபெற்ற கலவரத்தின்போது அரசுப் பேருந்தின் மீது கல் எரிந்ததாக 108 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 16 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பாலகிருஷ்ண ரெட்டி 16 பேரில் ஒருவர் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

 

அமைச்சராக இருப்பவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவி இழந்து தனது எம்எல்ஏ அந்தஸ்தையும்  இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாலகிருஷ்ணா ரெட்டி சார்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை பெறுபவா்கள் பதவி இழக்க வேண்டும். அதே போன்று மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டால் 6 ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாம செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் காலியிடம் 21 ஆக உயர்ந்தது. இவரின் ராஜினாமா கடிதம் ஆளுனர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #tn minister #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story