×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நோபல் பரிசு வழங்க என்னுடன் அனைவரும் கைகோருங்கள், அழைப்பு விடுத்த தமிழிசை.!

நோபல் பரிசு வழங்க என்னுடன் அனைவரும் கைகோருங்கள் ,அழைப்பு விடுத்த தமிழிசை.!

Advertisement

பிரதமர் மோடியை நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரத்தினதன்று  பிரதமர் மோடி 'ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார்

.மேலும் இதன் மூலம் நாட்டில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் அடையும் எனவும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வசதி அளிக்கப்படும் எனவும் கூறினார். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று  இந்த திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகள் சிலருக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சுகாதார அட்டைகளையும் வழங்கினார்.

இந்தநிலையில்,  தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டர் பக்கத்தில்,  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilisai #modi #nobel prize
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story