×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்ணீர் விட்டு அழுத ஓபிஎஸ்.! அதிமுக கொடி கட்டிய காரில் வந்து கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா.!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி ம

Advertisement

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். உடல்நல குறைவால் கடந்த 22ம் தேதி  விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உடல்நல குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி இன்று காலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 

ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள்,  உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைக்கு சசிகலா நேரில் வருகை தந்தார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு சசிகலா நேரில் ஆறுதல் தெரிவித்தார். கண்கலங்கிய ஓ.பன்னீர் செல்வத்த்தை சசிகலா கையை பிடித்து ஆறுதலாக சில வார்த்தைகளை கூறினார். அதிமுக கொடி கட்டிய காரில் மருத்துவமனை வந்த சசிகலா ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sasikala #ops #ops wife death #Admk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story