×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சு: விமான நிலையத்தில் பரபரப்பு..!

நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சு: விமான நிலையத்தில் பரபரப்பு..!

Advertisement

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று காலை  தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று நண்பகல் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித்சிங் கலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் ஊர் திரும்பிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரர் மீது காலணி வீசப்பட்டது. மதுரை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#PTR Palaanivel rajan #dmk #airport #madurai #TN politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story