×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நம்மை ஆண்டவர்களை பின்னோக்கி தள்ளிவிட்டோம்!; முதலிடத்தை பிடிக்க பாடுபடுவோம்: பிரதமர் மோடி பெருமிதம்..!

நம்மை ஆண்டவர்களை பின்னோக்கி தள்ளிவிட்டோம்!; விரைவில் முதலிடத்தை பிடிக்க பாடுபடுவோம்: பிரதமர் மோடி பெருமிதம்..!

Advertisement

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ரூபாய் எட்டாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பரூச் மாவட்டத்தில் மருந்துப்பொருள் பூங்கா அமைய உள்ளது, இந்த் பூங்காவில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை தொடங்கும். இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, " கடந்த 2014 ஆம் ஆண்டு நான் முதன் முறையாக பிரதமராக பதவியேற்ற போது 10 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5 வது இடத்தை நாம் ஆக்கிரமித்த போது இந்த நாடு பெருமிதம் அடைந்தது.

அதற்கு காரணம், ஏற்கனவே 5 வது இடத்தை ஆக்கிரமித்து இருந்தவர்கள் 250 ஆண்டு காலம் நம்மை ஆண்டவர்கள், நம்மை அடிமைப்படுத்தியவர்கள். அவர்களை முந்தி நாம் 5 வது இடத்தை கைப்பற்றியுள்ளோம். நமது கூட்டு முயற்சியின் காரணமாக அவர்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.

இப்போது நமது இளம் தலைமுறையினர், குறிப்பாக இளைஞர்கள் நமது நாட்டை கைப்பற்றியுள்ளனர். நமது நாடு நிகழ்த்தியுள்ள இந்த சாதனைக்கு இளம் தலைமுறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சிறு தொழில்துறையினர் என அனைவரும் தகுதியானவர்கள். பா.ஜனதா அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது. இந்திய பொருளாதாரத்தை முதலாவது இடத்திற்கு விரைவில் கொண்டு வர பாடுபடுவோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pm modi #gujarat #Indian Economy #5th Place #narendra modi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story