தவெக பக்கம் வந்துவிட்டு வீர வசனமா? அடக்கி வாசியுங்கள்.. காங்கிரஸ், விசிகவை கடுமையாக சாடிய அன்புமணி!
தவெக பக்கம் வந்துவிட்டு வீர வசனமா? அடக்கி வாசியுங்கள்.. காங்கிரஸ், விசிகவை கடுமையாக சாடிய அன்புமணி!
பெரியார் பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, தமிழக அரசியல் மற்றும் கூட்டணி நிலவரம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணியில் இருக்கிறார்களா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி கூறினார். கூட்டணியில் இடம்பெற்றுக்கொண்டே இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுவது குழப்பமான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தவெகவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறுவது குறித்து அன்புமணி விமர்சனம் செய்தார். காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கான வாக்குகளைப் பெறாமல், திமுக கூட்டணியில் போட்டியிட்டதன் மூலம் வெற்றி பெற்றதாக அவர் கூறினார். அதே நேரத்தில், விஜய்க்கு மக்கள் வாக்களித்திருப்பதால், மக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தவெகவினர் கூறுவதற்கு மட்டுமே உரிமை உள்ளது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... இந்தியா கூட்டணியில் இருந்து திடீரென வெளியேறிய திமுக..!!!
தொடர்ந்து, தற்போது தவெக பக்கம் வந்துள்ள கட்சிகள், தங்களது அரசியல் நிலைப்பாடு குறித்து வீர வசனங்கள் பேசுவது பொருத்தமற்றது என்றும் அன்புமணி விமர்சித்தார். குறிப்பாக கூட்டணி அரசியலில் இடம்பெறும் கட்சிகள் தங்களது கடந்தகால தேர்தல் முடிவுகளையும் கூட்டணி சூழலையும் கருத்தில் கொண்டு பேச வேண்டும் என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பான நிலைப்பாடுகளில் தெளிவு தேவை என்றும், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவுகள் குறித்து கட்சிகள் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார். அவரது இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எங்ககிட்டையே உங்க வேலையை காட்டுறீங்களா? தவெகவை மிரட்டிய காங்கிரஸுக்கு முதல்வர் விஜய் வைத்த செக்..!!!