புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனடி சேர்ந்துள்ளது: தாயாரின் மறைவு குறித்து பிரதமர் மோடி உருக்கம்..!
புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனடி சேர்ந்துள்ளது: தாயாரின் மறைவு குறித்து பிரதமர் மோடி உருக்கம்..!
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (99). குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் இருக்கும் அவரது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தெடர்ந்து சில நாட்களுக்கு முன் அவர் ஆமதாபாத்தில் இருக்கும் யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், பிரதமர் மோடியின் தாயாரின் உடல்நிலை சீராக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயாரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்
தற்போது அவரது உயிர்பிரிந்துள்ள நிலையில், தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார், ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.
100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் கூறினார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள். அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362