அவருடன் வந்தால் மட்டுமே அனுமதி! எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சொன்ன மகன்...! பின்னணியில் இருக்கும் காரணம்.... ஓபிஎஸ் எடுத்த திட்டவட்ட முடிவு!!!
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த பிறகு, அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாதின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் வட்டாரங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாதின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கட்சிப் பொறுப்பு, அடுத்தகட்ட அரசியல் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.
பொறுப்பு கிடைக்காததால் அதிருப்தியா?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, சட்டசபைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், திமுகவில் இணைந்த பல மாதங்கள் கடந்தும் இருவருக்கும் இதுவரை அதிகாரப்பூர்வ பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக குறித்து வெளியான தகவல்கள்
அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தொடக்கத்தில் இருந்தே ஓ.பி.ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வந்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்ட அரசியலில் கவனம்
மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து புதிய அரசியல் முடிவை எடுக்கலாம் என்று ரவீந்திரநாத் ஆலோசனை தெரிவித்ததாகவும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், திமுகவில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியில், தேனி மாவட்டத்தில் முக்கிய பொறுப்பைப் பெறும் முயற்சியில் திமுக தலைமையின் முடிவுக்காக அவர் காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க: அடுத்த அந்தர் பல்டி! திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த ஓ.பி.எஸ்.... தவெக-வில் இணையப்போகிறாரா?. தேனியில் பரவும் ரகசிய தகவல்!!!