×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்!. அவரின் இழப்பால் கதறும் அந்த பெண்!.

தமிழக பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்!. அவரின் இழப்பால் கதறும் அந்த பெண்!.

Advertisement


இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரும், பாஜகவின் மூத்த தலைவருமானவர் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி 93 வயது நிரம்பிய இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜூன் 11ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, நேற்று மாலை 5.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து 12 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவர் கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்

இதற்காக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் திகதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாயின் கையால் சின்னப்பிள்ளை பெற்றார்.

இன்று வாஜ்பாயின் மரண செய்தியைக் கேட்டு வேதனையடைந்த சின்னப்பிள்ளை, என் சேவைக்கு அங்கீகாரம் அளித்து சக்தி புரஸ்கார் விருது வழங்கியவர் வாஜ்பாய். அப்போது அவர் திடீரென எனது காலில் விழுந்து விட்டார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

நாட்டுக்கே தலைவர் எனது காலில் விழுந்து விட்டாரே என்று இருந்த போது, அருகில் இருந்த ஒருவர் தமிழில் என்னிடம், நீங்க செய்த செயலைப் பார்த்து வியந்து உங்களை கடவுளாக எண்ணி காலில் விழுந்தார் வாஜ்பாய். தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்.

அந்த மாதிரி ஒரு தங்க ராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vajpayee #crying #old lady #pjp
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story