×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காலியாகிறது நாதக கூடாரம்.. முக ஸ்டாலின் முன்னிலையில் 3000 பேர் திமுகவில் இணைவு.!

காலியாகிறது நாதக கூடாரம்.. முக ஸ்டாலின் முன்னிலையில் 3000 பேர் திமுகவில் இணைவு.!

Advertisement

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பெரியாருக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுத்து இருக்கிறார். இந்த விஷயம் மாநில அளவில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி, அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று, சீமானின் நீலாங்கரை வீட்டினை பெரியாரிய ஆதரவாளர்கள் முற்றுகையிடம்வும் முயன்றனர்.

சீமானுக்கு எதிராக உட்கட்சியில் எதிர்ப்பு குரல்

அதற்கு முன்னதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறி, பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தங்களின் பொறுப்புகளில் இருந்து விலகி சீமானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இருந்தனர். இது எதையும் கண்டுகொள்ளாத அக்கட்சியின் தலைமை, தனது செயல்பாடுகளில் உறுதியாக இருந்தது.

இதையும் படிங்க: கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.! 

திமுகவில் இணைகின்றனர்

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில், இன்று 3 ஆயிரத்திற்கும் அதிகமான நாம் தமிழர் கட்சியினர், தங்களை திமுகவில் இணைத்துக்கொள்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் 8 மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பல கிளை செயலாளர்கள் உட்பட 3000 நாம் தமிழர் கட்சியினர், தங்களை திமுகவில் இணைகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனி - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu politics #NTK #3000 persons Join DMK #நாதக #dmk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story