Election 2024 | கூட்டம் கூட்டமாக கட்சியில் தொண்டர்கள்... குஷியில் இபிஎஸ்.!
Election 2024 | கூட்டம் கூட்டமாக கட்சியில் தொண்டர்கள்... குஷியில் இபிஎஸ்.!
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்திருக்கிறது.
புதிதாக இணைந்த உறுப்பினர்களை வரவேற்ற இபிஎஸ் அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒரே நாளில் கட்சியில் இணைந்ததால் குசியிலும் இருக்கிறார்