×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் இருந்தது அதிமுக-வை அவமதிக்கும் செயல் - குஷ்பூ பேட்டி

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் இருந்தது அதிமுக-வை அவமதிக்கும் செயல் - குஷ்பூ பேட்டி

Advertisement

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து அலோசிக்க டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று குஷ்பு சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் இருந்தது அதிமுக-வை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்தார்.

ஆனால் துணை முதல்வருக்கு ஏற்பட்ட இதே நிலை பொதுமக்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அதே உதவியை செய்யுமா என்ற கேள்வி எழுகிறது. 

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக, மத்தியரசிற்கு அடிமையாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கட்சியால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார் குஷ்பு. 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலமையில் மாற்றம் வருமா என்று கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, அது ராகுல் காந்தியின் முடிவு என்று தெரிவித்தார் . 

குஜராத் முதல்வராக இருந்த போது உச்சத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட மோடியின் செல்வாக்கு, தற்போது குறைந்துள்ளது. காங்கிரஸ் எந்த கேள்வியை எழுப்பினாலும் தலையை சுற்றி மூக்கை தொட்டு பாஜக பதில் சொல்லி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kusbhoo #Admk #congress
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story