×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; கும்பகோணத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இரயில் மறியல்.!

ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; கும்பகோணத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இரயில் மறியல்.!

Advertisement

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் ராகுலுக்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால், அதே நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கப்பட்டன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் தலைமையில், கட்சியினர் உட்பட 4 பேர் இரயிலை மறித்து போராட்டம் செய்தனர். 

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் இரயிலை இடைமறித்து கே.எஸ் அழகிரி மற்றும் அவருடன் இருந்த 4 ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். 

இதனால் இரயில்வே பாதுகாப்புத்துறையினர் கே.எஸ் அழகிரியுடன் சமாதானம் பேசி இரயில் மறியல் போராட்டத்தை கைவிட வைத்தனர். பின்னர், அந்த இரயிலில் ஏறி கே.எஸ் அழகிரி சென்னை புறப்பட்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamilnadu political news #KS azhagiri #கே எஸ் அழகிரி #ரயில் மறியல் #ராகுல் காந்தி #காங்கிரஸ் #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story