படுக்கையறையில் மனைவி பார்த்த அதிர்ச்சி காட்சி! அமைச்சரின் கள்ளக்காதல் விவகாரம்.... ஆதாரத்துடன் உண்மையை போட்டு உடைத்த மனைவி! கேரள அரசியலில் பரபரப்பு!!!
கேரள அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மீது மனைவி பிந்து மேனன் முன்வைத்த உறவு குற்றச்சாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு ஆபத்தா?
கேரள அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கே.பி. கணேஷ் குமார் குறித்து வெளியான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதமாக மாறியுள்ளன. அரசியலிலும், மலையாள திரைப்பட உலகிலும் முக்கியமான முகமாக இருக்கும் அவரைச் சுற்றி தற்போது எழுந்துள்ள தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை, மாநில அரசியலையே சலசலப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமைச்சர் மீது மனைவியின் கடும் குற்றச்சாட்டு
மலையாள திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கணேஷ் குமார், 2001 முதல் பத்தனாபுரம் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது கேரள மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி பிந்து மேனன் அளித்துள்ள நேர்காணல் மாநில அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையறையில் பார்த்த அதிர்ச்சி காட்சி
பிந்து மேனன் கூறியதாவது, திருவனந்தபுரத்தில் உள்ள தங்களது இல்லத்தின் படுக்கையறைக்குச் சென்றபோது, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் மிகவும் அவமானகரமான நிலையில் இருந்ததை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும், அது மிகவும் மனவேதனை அளித்த சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்! விவாகரத்து கேட்கும் சங்கீதா... அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!
செல்போனில் எடுத்த புகைப்படம்
அந்த சம்பவத்தை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்த தாம், உடனடியாக தனது செல்போனில் அந்த காட்சியைப் புகைப்படமாக பதிவு செய்ததாகவும் பிந்து மேனன் கூறியுள்ளார். இதன் மூலம் கணேஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தற்போது கேரள அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
அமைச்சருக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி?
கணேஷ் குமார் தனது அரசியல் பயணத்தில் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தபோதும், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். தற்போது மூன்றாவது முறையாகவும் இதே போன்ற சர்ச்சை உருவாகியுள்ளதால், அவரது அமைச்சர்பதவி குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து கணேஷ் குமார் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. அரசியல் மற்றும் திரைப்பட உலகில் தாக்கம் செலுத்தும் ஒருவரைச் சுற்றி எழுந்துள்ள இந்த சர்ச்சை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதையே தற்போது கேரள அரசியல் வட்டாரம் கவனமாக நோக்கி வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கும் மகனுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு! இதற்கெல்லாம் காரணம் அந்த நடிகை தானா? பிரபலம் சொன்ன தகவல்!!!