தொண்டர்களை நோக்கி ரூ.500 பணத்தை விசிறிவிட்ட காங்கிரஸ் தலைவர்.. வள்ளல்போல வழங்கி வீடியோவில் சிக்கிய சோகம்.!
தொண்டர்களை நோக்கி ரூ.500 பணத்தை விசிறிவிட்ட காங்கிரஸ் தலைவர்.. வள்ளல்போல வழங்கி வீடியோவில் சிக்கிய சோகம்.!
அரசியலில் பணம் எப்படியெல்லாம் வழங்கப்படுகிறது என்பது இன்று வரை மர்மமாக மட்டும் இருக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருப்பவர் டி.கே சிவகுமார். இவர் நேற்று அம்மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம், பேவின்ஹள்ளி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது, அவர் வாகனத்தில் செல்லும்போதே, தனது வாகனத்திற்குள் நின்றவாறு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து தொண்டர்களை நோக்கி எறிந்தார். மக்கள் திரண்டிருந்த சூழலில், தனது வாகனம் நகரும் போது இவ்வாறான செயலை அவர் செய்திருந்தார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ள நிலையில், அம்மாநில தேர்தல் அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாகிறது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362