Breaking News : குஜராத்தில் ஆளும் பா.ஜனதா கட்சி 149 தொகுதிகளில் முன்னிலை!.. தொண்டர்கள் கொண்டாட்டம்..!
Breaking News : குஜராத்தில் ஆளும் பா.ஜனதா கட்சி 149 தொகுதிகளில் முன்னிலை!.. தொண்டர்கள் கொண்டாட்டம்..!
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தர்நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்களும் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை அங்கு கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இறுதிகட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தற்போது 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 149 தொகுகளில் ஆளும் பா.ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பா.ஜனதா கட்சியினர் உற்சாகமாக கொண்டாட துவங்கியுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362