ஈரோடு கிழக்கு வெற்றிக்கு காரணம் யார்? - திமுக வேட்பாளர் மனம்திறப்பு.!
ஈரோடு கிழக்கு வெற்றிக்கு காரணம் யார்? - திமுக வேட்பாளர் மனம்திறப்பு.!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கும் - நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமிக்கும் இடையே நேரடி மோதல் நிலவியது.
இடைத்தேர்தல் என்பதால் அங்கு ஆளுங்கட்சியின் பணபலம் அதிகம் இருக்கும். மக்களுக்கு நேர்மையான தேர்தல் நடைபெறாது என குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டது.
முன்னிலை
இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் சற்று நேரத்தில் கிடைத்துவிடும். பகல் 2 மணி நிலவரப்படி சந்திரகுமார் 63984 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 13945 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: தோனி அரசியலுக்கு வருகிறாரா.? காங்கிரஸ் எம்.பி. புதிய தகவலால் பரபரப்பு.!
வெற்றிக்கு காரணம் யார்?
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், "இந்த வெற்றிக்கு காரணம் முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவர்கள் செயல்படுத்திய திட்டங்களே, ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு போல, 2026 ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
பிரதானமான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், அக்கட்சியினரின் அறிவுறுத்தல்படி நோட்டாவுக்கு தற்போது அதிகம் மக்கள் வாக்களித்து இருக்கலாம். நேரடியாக அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் மோதாமல், அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். திமுக இந்த தேர்தலில் வெற்றி அடைந்ததைப்போல, 2026 லும் வெற்றி அடையும்" என பேசினார்.
இதையும் படிங்க: கட்சியின் விதியை மீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி; அதிரடி காட்டிய தலைமை.. பறந்தது உத்தரவு.!