×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடையவுமில்லை, சிதறவுமில்லை..  எடப்பாடி பழனிசாமி காரசார பேச்சு..!!

திமுக உடையவுமில்லை, சிதறவுமில்லை கட்டுக்கோப்பாக இருக்கிறது. அதிமுகவில் இனி வெற்றிடம் என்பதற்கே இடமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.

Advertisement

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த செயற்கூட்டத்தில்,  ஆகஸ்ட் 20 தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

அதன்பின்னர் பேசியவர், எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த கட்சி தற்போது பெரும் ஆலமரம் போல் விரிந்து வளர்ந்துள்ளது. வெறும் 75 நாளில் இதுவரை 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இது மிக பெரிய வரலாற்று சாதனை எனவும், தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் பேசியுள்ளார். 

மேலும் பேசிய அவர், அதிமுக உடையவுமில்லை, சிதறவுமில்லை கட்டுக்கோப்பாக இருக்கிறது. அதிமுகவில் இனி வெற்றிடம் என்பதற்கே இடமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக மதுரை மாநாடு அமையும் என்பதை தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#edappadi palanisamy #Admk #politics #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story