வெள்ளை நிற பொடியால் வெடித்த போராட்டம்! மேயர் பிரியா, சேகர்பாபு அதிரடி கைது.... பழைய ஸ்டைலில் தவெக அரசுக்கு ஆட்டம் காட்டும் திமுக! விஜய் எடுக்கப்போகும் அந்த 'அதிரடி' முடிவு.!!!
அமைச்சர் 'கில்லி' சரத்குமார் தொடர்பான சர்ச்சை வீடியோ விவகாரத்தை எதிர்த்து திமுக மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் நடத்தியது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக வெற்றிக் கழக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 'கில்லி' சரத்குமார் தொடர்பான சர்ச்சை வீடியோ விவகாரம் மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய வீடியோ
ஐபிஎல் போட்டியின்போது விவிஐபி பகுதியில் அமர்ந்திருந்த அமைச்சர், வங்கி கார்டு மூலம் மொபைல் திரையில் வெள்ளை நிறப் பொடியை நசுக்குவது போன்ற பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர், அது போதைப்பொருள் அல்ல என்றும், தனது குழந்தைக்காக வைத்திருந்த மாத்திரை என்றும் விளக்கம் அளித்தார். இருப்பினும், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக முன்வைத்து வருகின்றன.
இதையும் படிங்க: அதை என்னால் மறக்க முடியவில்லை.... என்னை விடாது துரத்தும் துயரம்! ஆஃப் கேமரா பேட்டியில் மனம் திறந்து பேசிய தவெக விஜய்!
கடந்த வாரம் முதல்வர் விஜய் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி நடைபெற்ற பிரம்மாண்ட மாரத்தான் பேரணிக்கு கிடைத்த வரவேற்புக்கு பின்னர் இந்த வீடியோ வெளியாகியிருப்பது அரசுக்கு எதிரான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சென்னையில் தீவிர போராட்டம்
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று, அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்றும், முதல்வர் விஜய் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டத்தின் போது காவல்துறை அமைத்திருந்த தடுப்புகளை மீறி முன்னேற முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் களத்தில் புதிய கட்டம்
சமீப காலமாக அமைதியான அரசியல் அணுகுமுறையை பின்பற்றி வந்த திமுக, தற்போது மீண்டும் தீவிர களப்போராட்டங்களை முன்னிறுத்தத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதே நேரத்தில், திமுக முன்னெடுத்துள்ள இந்த மாநிலம் தழுவிய போராட்டம் புதிய ஆட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒழிக்க போராடி ஓடின CM.. அதே நேரத்தில் லீக்கான தவெக அமைச்சரின் வீடியோ! அமைச்சர் தரப்பின் பரபரப்பு விளக்கம்!!!