BREAKING: ஷாக் நியூஷ்! கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு ரிசல்ட்.... அம்பலமான அதிர்ச்சி உண்மையால் பரபரப்பு...!!!
கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாக திமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் என்.ஆர். இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் இருப்பதாகவும், நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்து திமுக சார்பில் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக உள்ளதாக திமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக குற்றச்சாட்டு
செய்தியாளர்களை சந்தித்து பேசிய என்.ஆர். இளங்கோ, வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்களில் பழுது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் சுமார் 30 சதவீத இயந்திரங்களில் கோளாறுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக மற்றும் பாஜக-வுக்கு நடுவுல ரகசிய டீல்? ஒரே போடாய் போட்ட உதயநிதி ஸ்டாலின்!!!
வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை தேவை
வாக்கு எண்ணும் மையங்களில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாதது கவலை அளிப்பதாகவும், இது மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் நடைமுறைகள் முழுமையாக நம்பகத்தன்மையுடன் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தை அணுக முடிவு
இதனால், தேர்தல் நடைமுறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக உடனடியாக நீதிமன்றத்தை அணுகி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக என்.ஆர். இளங்கோ தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: சற்று முன்... அடுத்த சிக்கலில் வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி! சுற்றி வளைத்த தவெகவுக்கு கையில் கிடைத்த அதிகாரப்பூர்வ ஆதாரம்.!!!