இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அநியாயத்துக்கு எதிராக போராடினார்களா.? பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் அதிரடி கேள்வி.!
இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அநியாயத்துக்கு எதிராக போராடினார்களா.? பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் அதிரடி கேள்வி.!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பார்த்து சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறிய விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மணிப்பூரில் நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பேசியிருந்த சீமான் அநியாயக்காரர்களிடம் ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தான் என பரபரப்பான சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். மேலும் அவர் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறியிருந்தார் .