தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பரபரப்பு தீ...ர்ப்பு.."! "ஆளுநருக்கு ஏது அதிகாரம்.."? கிடப்பில் கிடந்த தீர்மானங்கள்.! உரிமையை வென்றெடுத்த மாநில அரசு..!

பரபரப்பு தீ...ர்ப்பு..! ஆளுநருக்கு ஏது அதிகாரம்..? கிடப்பில் கிடந்த தீர்மானங்கள்.! உரிமையை வென்றெடுத்த மாநில அரசு..!

deputy-cm-hails-tn-govt-and-supreme-court-judgement-3we Advertisement

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 தீர்மானங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கிடப்பில் போட்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை இன்று வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் தமிழகம் என்றுமே இந்தியாவிற்கு ஒளிவிளக்காக திகழ்கிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

கிடப்பில் போடப்பட்ட தீர்மானங்கள் தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் மற்றும் மாநிலங்களின் உரிமை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பிரச்சனைகளுக்குரிய தீர்மானங்களும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவற்றை ஜனாதிபதியின் ஒப்புதல் வேண்டும் எனக் கூறி ஆளுநர் ரவி கிடப்பில் வைத்திருந்தார். இது தமிழக அரசு தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Latest tamil news

உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஆளுநரின் அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட்டது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியது தான் ஆளுநரின் கடமை எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் பெருமிதம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்க்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசிற்கும் மாநில உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றி என பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசியலில் தமிழகம் எப்போதுமே ஒளிவிளக்காக இருக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு சான்று எனவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் தமிழகம் என்றுமே முதன்மையாக விளங்குகிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story