"சொல்லி அடிக்கும் கில்லி.." முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள்.!! கலக்கத்தில் ஆளுநர் மாளிகை.!!
சொல்லி அடிக்கும் கில்லி.. முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள்.!! கலக்கத்தில் ஆளுநர் மாளிகை.!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றாமல் தொடர்ந்து கிடப்பில் வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநர், மாநில அரசின் ஆலோசனைகளின் படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது அரசியல் வரலாற்றில் முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுகளுக்கு தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.
தமிழக அரசு வழக்கு
தமிழக ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் ஒருதலைபட்சமாக இருந்து வந்தது. தமிழக அரசு சட்டமன்றங்களில் நிறைவேற்றும் மசோதாக்களை வலதுசாரி சிந்தனையோடு தமிழக ஆளுநர் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்த நீதிபதிகள் தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் குடியரசு தலைவரின் நடவடிக்கையும் செல்லாது என தெரிவித்தனர்.
பல்கலைக்கழக வேந்தராகும் தமிழக முதல்வர்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார். மேலும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைம் முதல்வரே நியமிப்பார்.
இதையும் படிங்க: #Breaking: தமிழ்நாடு முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து; உபி முதல்வருக்கு பதிலடி கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்.! என்ன சொன்னார் தெரியுமா?
முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில் தமிழக முதல்வரே துணை வேந்தர்களை நியமிப்பார். மேலும் சில பல்கலைக்கழகங்களில் தமிழகத்திற்கு எதிராகவும் இடதுசாரி கொள்கைக்கு எதிராகவும் உள்ள துணைவேந்தர்கள் இருக்கின்றனர். மேலும் சில பல்கலைக்கழகங்களில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இவர்களும் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.
இதையும் படிங்க: #Breaking: சர்ச்சை பேச்சு.. லீக்கான வீடியோ.. திமுக மா.செ பதவி பறிப்பு.. அதிரடி காட்டிய திமுக தலைமை.!