"திடீரென டெல்லி பறக்கும் CM விஜய்".. பின்னணியில் இருக்கும் காரணம்...! அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!!!
முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் வைகோவின் நாடாளுமன்ற உரை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறும் விழா
டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியாவில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்ட நூல் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு வைகோ அண்மையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழைப்பை ஏற்ற முதலமைச்சர்
வைகோவின் அழைப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் விஜய், விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பயண ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரத்தில் அதிகரித்த எதிர்பார்ப்பு
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இது விஜயின் மூன்றாவது டெல்லி பயணம் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணம் தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகின்றன.
இதையும் படிங்க: பல எதிர்ப்புகளை தகர்த்து இன்று கரூர் செல்லும் CM விஜய்! கரூர் பயணத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்? அதிர வைத்த விஜய்யின் முடிவு.!!!