#Breaking அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
#பிரேக்கிங் அதிமுக பொதுக்குழு நடைபெறுமா?? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்டிருந்தார். இதற்கிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொண்டர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் ஓபிஎஸ் அளித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கட்சி விதிகளுக்கு உட்பட்டு அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று பொதுக்குழு நடைபெற உள்ளது. அதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362