பாஜக-வில் அடுத்த அதிர்ச்சி.... திடீரென பதவியை ராஜினாமா செய்த பஜாக கூட்டுறவுப் பிரிவு மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன்..!!!
தமிழக பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன் திடீர் ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் தோல்விகள் மற்றும் கட்சி நிர்வாகம் குறித்து கடிதத்தில் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கடந்த இரண்டு முக்கிய தேர்தல்களில் கட்சி சந்தித்த தோல்விகளால் ஏற்பட்ட மனவருத்தமே இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம் வெளியாகியுள்ள நிலையில், தமிழக பாஜக-வில் மீண்டும் உட்கட்சி விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்த கேள்விகளும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.
தேர்தல் தோல்வியால் மனவேதனை
தகவலின்படி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி அடைந்த தோல்விகள் குறித்து மகா சுசீந்திரன் கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஏற்படும் தேர்தல் தோல்வி தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் செயல்பாட்டு தொய்வையும் உருவாக்கியுள்ளதாக அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக அடுத்த போர்க்கொடி தூக்கிய முக்கிய புள்ளி! அதிமுகவில் கிளம்பும் புதிய விவாதம்..!!!
கட்சிக்காக உழைக்கும் அடிப்படைத் தொண்டர்களின் மனநிலையை தலைமையகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில தலைமையை விமர்சித்த கடிதம்
ராஜினாமா கடிதத்தில் மாநிலத் தலைமையையும் அவர் நேரடியாக விமர்சித்துள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள், சாதாரண தொண்டர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்தால்தான் கட்சி வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொண்டர்களுக்கும் தலைமைக்கும் இடையிலான தொடர்பு வலுப்பெற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாஜக-வில் மீண்டும் உட்கட்சி சலசலப்பு
நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகும், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் மற்றும் தேர்தல் தோல்வி குறித்த அதிருப்தி வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. அந்த சூழலில் மகா சுசீந்திரனின் ராஜினாமா மற்றும் அவரது கடிதத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: BREAKING: விசிக கட்சி 100% தேர்தல் களத்தில் போட்டியிடாது...! காலையிலேயே திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு.!!!