திடீரென அமெரிக்கா பறக்கும் அண்ணாமலை! பரபரப்பு உச்சத்தில் அண்ணாமலையின் 'மர்ம மௌனத்தின் ' காரணம்!!!
தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சத்தில் உள்ள நிலையில், அண்ணாமலை அமெரிக்கா பயணம் மேற்கொள்வதும், சமீபத்திய அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் இதுவரை கருத்து தெரிவிக்காததும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பான சம்பவங்கள் புதிய விவாதங்களை உருவாக்கி வருகின்றன. ஆளும் தவெக, திமுக மற்றும் அதிமுக இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடரும் அரசியல் பரபரப்பு
அதிமுகவைச் சேர்ந்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் ஆதரவு! அண்ணாமலைக்காக பாஜகவை கூண்டோடு காலி செய்த 300 நிர்வாகிகள்..... அதிர்ச்சியில் நயினார் நாகேந்திரன்!!!
அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை
இந்தச் சூழலிலேயே அண்ணாமலை இன்று மதியம் அமெரிக்காவிற்கு புறப்படுகிறார். கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியிலிருந்தும் வெளியேறினார். தற்போது 'We The Leaders' என்ற அமைப்பின் மூலம் மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல், சமூக வலைதளங்கள் மூலமாகவே தனது கருத்துகளை அவர் பகிர்ந்து வருகிறார்.
மௌனம் குறித்து எழும் கேள்விகள்
மாநில பாஜக தலைவராக இருந்த காலத்தில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, தற்போது அவரைச் சுற்றி எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளியிடாதது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில், அமெரிக்காவில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் தனது பயணத்தை தொடர்வதும் பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: அடுத்த அந்தர் பல்டி! திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த ஓ.பி.எஸ்.... தவெக-வில் இணையப்போகிறாரா?. தேனியில் பரவும் ரகசிய தகவல்!!!