அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! செம ஷாக்கில் எடப்பாடி..!!!
அதிமுக கோவை தெற்கு மாவட்ட முக்கிய நிர்வாகியான வி.பி. கந்தவேல், மன உளைச்சலை காரணமாகக் கூறி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகியிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியும், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான வி.பி. கந்தவேல், கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சிக்காக நீண்ட காலமாக உண்மைத் தொண்டனாக செயல்பட்டதாக வி.பி. கந்தவேல் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அண்மையில் நடந்த தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் நடைபெறும் சில நிகழ்வுகள் தனக்கு கடும் மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்..... அதிமுக வின் முக்கிய புள்ளியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கிய எடப்பாடி! அரசியலில் பெரும் பரபரப்பு!!!
அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகல்
இதனால் தான் கட்சியில் இருந்து முழுமையாக விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிர்வாகிகளில் ஒருவராக வி.பி. கந்தவேல் கருதப்பட்டார். இதனால் அவரது விலகல் மாவட்ட அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை அதிமுகவில் அதிகரிக்கும் உட்கட்சி பேச்சு
அண்மைக் காலமாக கோயம்புத்தூர் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி கருத்து வேறுபாடுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முக்கிய நிர்வாகியின் இந்த விலகல் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையடுத்து, கோவை மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக அவர் எந்த அரசியல் நிலைப்பாடு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!