×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பக்கா பிளான் போட்ட ஓ.பி.எஸ்...! வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்குமா..?

பக்கா பிளான் போட்ட ஓ.பி.எஸ்...! வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்குமா..?

Advertisement

அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட உள்ளதாக கூறி, இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில், அதிமுக உறுப்பினர் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி இடைக்கால் தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சண்முகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுகவில் புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின்  பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11ம் தேதி நடைபெறும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் இயற்றக்கூடாது என்ற தடையை மீறி, தமிழ்மகன் உசேனை அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக நியமித்து புதிய தீர்மானத்தை இயற்றியுள்ளனர்.

அவைத்தலைவர் நியமனமே சட்டவிரோதம் என்ற நிலையில், வருகிற 11-ஆம் தேதி பொதுக்குழுவை அவர் கூட்டுவதும் சட்டவிரோதம். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனவே, அந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர முடியாது.

மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பாக அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடைபெற உள்ளதாக கடந்த 4-ஆம் தேதி அன்றுதான் அழைப்பு கிடைத்துள்ளது. எனவே உரிய கட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெறவுள்ளநிலையில் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Admk #ops #General Assembly
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story