அதிர்ச்சி! பனைமரத்தை சுற்றி குவியும் மக்கள்! என்ன காரணம் தெரியுமா?
Water from panaimaram in thoothukudi
நமக்கு பயன்தர கூடிய மரங்களில் ஓன்று பனைமரம். தண்ணீர் இல்லாத இடங்களில் கூட பனைமரம் நன்கு வளரும். பனைமரம் இருந்தால் அந்த பகுதியில் வறட்சியே வராது என்றெல்லாம் கூட சொல்வார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒருபகுதியில் பனைமரத்தில் அதிசயம் நடந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் பனை மரம் ஒன்று உள்ளது. இந்த பனை மரம் கருகி போயுள்ளது. பல நாட்களாக அப்படியே இருந்த இந்த பனை மரத்தில் திடீரென தண்ணீர் பீறிட்டு வந்துள்ளது.
நிலத்தில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் ஒரு ஓட்டை மூலம் அந்த பனைமரத்தில் இருந்து நீர் வெளியேறுகிறது. இதிலிருந்து எப்படி தண்ணீர் வருகிறது என்றே தெரியாமல் இந்த காட்சியை கண்டவர்கள் பிரமித்து நின்று உள்ளனர். இந்த செய்தி அக்கம் பக்கத்தினருக்கு தெரியவே தற்போது, இந்த காட்சியை பார்க்க ஏராளன பொதுமக்கள் கூடிய வண்ணம் உள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362