எமதர்மனுக்கே கண்டன போஸ்டர் அடித்த மதுரைவாசிகள்..! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்..!
Warning poster for yematharman in Madurai
திருமணம், காதுகுத்து, இறுதி சடங்கு என எதுவாக இருந்தாலும் போஸ்டர் அடிக்கும் கலாச்சாரம் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதிலும், மதுரையில் போஸ்டர் அடிப்பது பற்றி சொல்லவே தேவை இல்லை. மதுரையும், போஸ்டர் கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் ஏரியா பிரமுகர் ஒருவர் மரணமடைந்த நிலையில் சிங்கத்தை பிடித்துச்சென்ற எமதர்மனுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக இளைஞர்கள் சிலர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
மதுரை வடக்குமாசி வீதியில் சேர்ந்த அய்யாவு என்பவர் இறந்ததை தாங்கமுடியாத அவரது ஆதரவாளர்கள், தங்களது எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர். சிங்கத்தை பிடித்துச்சென்ற எமதர்மனுக்கு கண்டனம் என அவர்கள் அடித்துள்ள வசனம் தற்போது வைரலாகிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362