மாத சம்பளம் வாங்கியதும் முதலில் இதை செய்தால் செல்வம் பெருகும்! என்ன செய்யவேண்டும் தெரியுமா?
Tips for saving money in tamil
நாம் அனைவரும் ஓடி ஓடி வேலை பார்பது மாதம் மாதம் நாம் வாங்கும் சம்பளத்திற்காகத்தான். கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்த பணம் கையிலையே நிக்கலையா? என்ன செய்தால் பணம் நம் கையில் நிற்கும்? வாங்க பாக்கலாம்.
பொதுவாக சம்பளம் வாங்கியதும் உடனே அதில் இருந்து பணத்தை எடுத்து கடன் அடைப்பது, பில் கட்டுவது போன்றவற்றை தவிர்த்துவிட்டு சம்பள பணத்தில் இருந்து சிறு தொகையை எடுத்து சேமித்து வைப்பதன்மூலம் செல்வம் பெருகும்.
அதேபோல மாத சம்பளம் வாங்கிய உடன், குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு எண்ணெய் அல்லது நெய் வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. மல்லிகை பூ வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்தாலும் அஷ்ட லட்சுமி நம் வீட்டில் குடியேறி நமது வீட்டில் செல்வம் சேரும்.
சம்பள பணத்தில் முதலில் இனிப்பு வாங்கி தான் சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுக்கு கொடுப்பதும் நல்லது. அதேபோல, சம்பள பணத்தில் கல் உப்பு வாங்கி சமையல் அறையில் வைத்தாலும் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.